தடுப்புச்சுவர் இ்ல்லாத பாலம்

Update: 2023-07-26 17:35 GMT
மணிமுத்தாறு பேரூராட்சி கீழ ஏர்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தில் தடுப்புச்சுவரும் இல்லாததால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இந்த பாலம் வழியாகத்தான் வைராவிகுளம், சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதி மக்களும் சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான பாலத்தை உடனே சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்