நிழற்கூடம் தேவை

Update: 2023-07-26 17:18 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் பழுதடைந்த காரணமாக இடித்துவிட்டனர். அந்த இடத்தில் மீண்டும் புதிய நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி அலுவலர், தாசில்தார், மாவட்ட அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பள்ளி குழந்தைகளும், வயதானவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

-கார்த்திக், பள்ளத்தாதனூர்.

மேலும் செய்திகள்