குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-26 12:04 GMT


மயிலாடுதுறை மாவட்டம் புலவனூரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்

சாலை பழுது