விபத்தை தடுக்க வேகத்தடை

Update: 2023-07-26 09:32 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது சாலை விரிவாக்கம் செய்ததால் சிலர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். மேலும் காரப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிகபடியான மாணவர்கள் படிப்பதாலும், பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காரப்பட்டு பெரிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இதை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேகத்தடைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்