குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-23 12:00 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலைகளில் இருந்து கோம்புப்பாளையம் பகுதிக்கு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தார்சாலையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்