போக்குவரத்து இடையூறு

Update: 2023-07-23 10:35 GMT

கோத்தகிரி பகுதியில் இருந்து திம்பட்டி பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டப்பட்டு, சாலையோரத்தில் போட்டு வைக்கப்பட்டு உள்ளன. இந்த மரத்துண்டுகள் நீண்ட நாட்கள் ஆகியும் அகற்றப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரத்துண்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்