பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி

Update: 2023-07-19 11:28 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மேம்பாலம் கீழ் உள்ள கரூர் சாலை முதல் கந்தம்பாளையம் வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதற்காக கரூர் சாலை பகுதியில் இருந்த பாறைகளை அகற்றி விட்டு, தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஜல்லி கற்களில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்