ஆமை வேகத்தில் பணி

Update: 2023-07-19 09:24 GMT

கோவை சவுரிபாளையத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பிரதான சாலையில் கல்லறை வீதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி முடிவடையவில்லை. அந்த பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து, சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்