குறிஞ்சிப்பாடி அருகே பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.