குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-12 11:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்திலிருந்து, பிராந்தனி கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு செல்வதற்கு பதிலாக 6 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டி உள்ளது. இதனால் பிராந்தனி கிராமத்தில் இருந்து பாண்டி பத்திரத்தில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்