போக்குவரத்து இடையூறு

Update: 2023-07-12 10:47 GMT

கோவை மசக்காளிபாளையம் சாலையில் தனலட்சுமி நகர் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து, குழியை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்