விபத்து அபாயம்

Update: 2023-07-12 10:46 GMT

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கோவில்பாளையத்துக்கு செல்ல சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலையில் திடீரென குழி ஏற்பட்டு உள்ளது. அதில் மழை பெய்து, தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்