அடிக்கடி விபத்துகள்

Update: 2023-07-02 15:19 GMT

அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் வாகனங்களின் பாதுகாப்புக்காக ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். ஆனால் இதில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்கள் வரும்போது ரோட்டில் வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் தெரிவதில்லை. அதனால் வாகனங்கள் தடுப்புச்சுவரில் மோதி அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே தடுப்புச்சுவரில் விளம்பரம் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்