எச்சரிக்கை பலகை

Update: 2022-07-23 16:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ராமன்தொட்டி செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-விஜி, சூளகிரி.

மேலும் செய்திகள்