சாலை வசதி வேண்டும்

Update: 2022-04-28 14:55 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகர் அருகே உள்ள ராஜேஷ் நகரில் போதுமான சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கற்கள் நிறைந்த மண் சாலையிலேயே அப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை மிகவும் மோசமடைந்து நடந்து செல்லக்கூட சிரமமாக இருக்கின்றது. எனவே அதிகாரிகள் கவனித்து இப்பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்