இணைப்பு சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-07-23 15:05 GMT

பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தையில் நடைபெறுவதால் இருபுறமும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உழவர் சந்தை எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் உழவர் சந்தை அருகே தார் சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் வடக்கு மாதவியின் சாலையிலிருந்து நகருக்கு மற்றும் வெளி பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதனை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் செய்திகள்