வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-25 09:06 GMT

துடியலூரில் இருந்து சரவணம்பட்டிக்கு செல்லும் சாலையில் வெள்ளக்கிணறு பகுதியில் எதிர் எதிரே 2 பள்ளிக்கூடங்கள் அமைந்து உள்ளன. இங்குள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சாலை சீரமைப்பு செய்தபோது, அந்த வேகத்தடையை அகற்றிவிட்டனர். அதன்பிறகு வேகத்தடை அமைக்கவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றனர். இதனால் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்