சென்னை, அண்ணாநகர் மேற்கு, திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பைக்கில் செல்வோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.