முறையாக அமைக்கப்படாத சாலை

Update: 2022-07-23 14:04 GMT

சேலம் மேட்டுப்பட்டி பெருமாபாளையம் அம்பேத்கர் நகர் 5 -வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்தது. ஆனால் ஏதோ பெயரளவுக்கு தான் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒதுக்கீடு செய்த நிதி முழுமையாக பயன்படுத்தபடவில்லை என தெரிகிறது. அதுவும் சுமார் 400  மீட்டர் தூரம் இந்த சாலை முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த சாலைக்கு ஒதுக்கீடு செய்த நிதியை முழுமையாக பயன்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும்.

- அறிவழகன், மேட்டுபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்