பராமரிப்பு இல்லாத தார் சாலை

Update: 2022-07-23 14:00 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டி கிராம பகுதியில் உள்ள தார் சாலை 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் சேதமடைந்து காணப்படுகிறது. சுமார் 15 வருடங்களாக இதேநிலைதான் நீடிக்கிறது. இந்த சாலையை பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். அவசர தேவைக்காக இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்