தாமதமாகும் சாலை பணி

Update: 2023-06-07 09:12 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கிடையே சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. எனவே பள்ளிகள் தொடங்குவதற்குள் இந்த சாலை பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்