தார் சாலை வேண்டும்

Update: 2023-06-04 11:44 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா சேங்கல் ஊராட்சி மாணிக்கபுரத்தில் இருந்து முத்தம்பட்டிக்கு சுமார் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்ற மண் சாலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெட்டல் சாலையாக அரசு மாற்றியது. அதன் பின்னர் இந்த மெட்டல் சாலை தார்சாலையாக மாற்றப்படும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தார்சாலையாக மாற்றப்படவில்லை . மேலும் இந்த சாலையில் தொடர் பராமரிப்பின்மையால் மெட்டல் சாலையின் ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பஸ், வேன்கள் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் இந்த 7 கிலோமீட்டர் நீளத்தை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்