சாலை வசதி வேண்டும்

Update: 2023-05-31 14:32 GMT

தஞ்சை மேலவெளி தோட்டம் பகுதி ஆபிரகாம் பண்டிதர் நகர் 2-ம் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், முறையான குடிநீர் வசதியும் கிடைப்பதில்லை. உயர் மின் அழுத்த நேரங்களில் வீடுகளில் உள்ள மின் உபயோக பொருட்கள் அடிக்கடி சேதமடைகிறது. இதனை தவிர்க்க அந்த பகுதியில் மின்மாற்றி அமைக்க வேண்டும், சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

 

மேலும் செய்திகள்