வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-31 08:13 GMT

துவரங்காடு மத்தியாஸ் நகர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு குளம் உள்ளது. குளத்தின் அருகில் ஒரு தனியார் பள்ளியும் உள்ளது. இதனால், இந்த பகுதியில் எப்போது பரபரப்பாக காணப்படும். இந்த குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளிகள் திறக்கும் நிலையில் உள்ளதால் மாணவர் நலன்கருதி குளத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இந்திரா, துவரங்காடு.

மேலும் செய்திகள்