மண் குவியல் அகற்றம்

Update: 2023-05-24 10:06 GMT

கோவை மசக்காளிபாளையம் சுப்பகோனார் வீதியில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் கிடந்தது. அங்கு மண் குவியலாக கிடந்ததால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிெராலியாக சாலையில் கிடந்த மண் குவியல் அகற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டு உள்ளது. எனவே செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

மேலும் செய்திகள்