குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-24 10:03 GMT

கோவை மாநகராட்சி 20-வது வார்டு ராமகிருஷ்ணாபுரம் கஸ்தூரிபாய் 2-வது வீதியில் குடிநீர் குழாயை சீரமைக்க சாலை தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிவடைந்த பிறகும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்