சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-21 12:33 GMT

தஞ்சை ஈஸ்வரி நகரில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்