குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-21 11:53 GMT

கரூர் மாவட்டம், கரூர்-ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை புன்னம் சத்திரம் பகுதியில் இருந்து உப்புப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் மற்றும் புன்னம் சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டப் பகுதியில் இருந்து உப்புப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உப்புப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனங்களும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்