வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-21 09:46 GMT

கோவை மசக்காளிபாளையம் மெயின்ரோடு சுப்பகோனார் வீதியில் சாக்கடை பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு உள்ளது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாக்கடை பணிகள் மந்த வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் குண்டும், குழியுமாக கிடக்கும் அந்த மண்சாலையில் செல்ல பாதசாரிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்