சேறும், சகதியுமான சாலை

Update: 2023-05-21 09:46 GMT

கோவை திருச்சி ரோடு ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மழை பெய்து, 3 நாட்களை கடந்த பிறகும் தேங்கி நின்ற தண்ணீர் வடியாமல் கிடக்கிறது. இதனால் அங்குள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்