சாலையோரத்தில் பாதுகாப்பற்ற கிணறு

Update: 2023-05-17 10:46 GMT

கரூர் மாவட்டம்,கட்டிபாளையத்தில் இருந்து திருக்காடுதுறை செல்வதற்கு புகழூர் வாய்க்கால் ஓரத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தாசாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. அதன் காரணமாக கிணற்றில் தண்ணீர் அதிகமாக ஊரும் போது சாலையின் மண் ஊரி கிணற்றுக்குள் விழுந்து வருகிறது. இதனால் தார் சாலையில் அகலம் குறைந்து வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் கிணறு இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எனவே பெரும் அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்