குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-17 10:45 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் வழியாக அம்மாசத்திரம் வரை செல்லும் கிராம சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்