சாலை இணைக்கப்படுமா?

Update: 2023-05-17 10:44 GMT

பெரம்பலூர் உழவர் சந்தை அமைந்துள்ள வடக்குமாதவி சாலையில் காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த சாலை குறுகலாக இருப்பதால், இலகுரக வாகனங்கள் போலீஸ்நிலையம் எதிரே இருபுறமும் ஒன்றையொன்று கடந்து செல்லமுடியவில்லை. ஆகவே உழவர் சந்தை அருகே இந்துசமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் பயன்படுத்தப்படாமல் புதர்மண்டிப்போய் உள்ளது. இந்த நிலத்தின் வழியே வடக்குமாதவி சாலையை எளம்பலூர் சாலையுடன் இணைத்து தார்சாலை அமைத்துக்கொடுத்தால், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய வினாயகர் கோவில் பகுதியில் இருந்து பழைய-புதிய பஸ் நிலையத்தை நோக்கி இருசக்கர வாகனங்கள், இலகுரகவாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் எளிதில் சென்றடையமுடியும். காலவிரையமும், போக்குவரத்து நெருக்கடியும் தவிர்க்கப்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்