சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-14 16:29 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் பகுதியில் இருந்து இருதயபுரம் வழியாக உருத்திரசோலை செல்லும் தார் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆமை வேகசத்தில் செல்லும் நிலை உள்ளது. மேலும் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்