வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-14 08:14 GMT

கோவை ராம்நகர் சரோஜினி வீதியில் குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழி தோண்டப்பட்டது. அந்த பணி முடிவடைந்த பிறகும் குழியை சரிவர மூடாமல் உள்ளனர். இதனால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக சாலை மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சாலையை முறையாக சீரமைக்க அதிகரிரகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்