குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-10 14:57 GMT

அறச்சலூரில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் வரை உள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன. இதன் காரணமாக பள்ளத்தில் விழாமல் ஒதுங்கி சென்று வருகிறார்கள். அப்போது பின்புறம் வரும் வாகனங்களால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக அறச்சலூரில் இருந்து அனுமன்பள்ளி வரை செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்