குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-10 13:43 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழைவும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் உள்ளே செல்லும் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகிறது. மேலும், மழைகாலங்களில் இந்த குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்