பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-05-10 09:53 GMT

கோவை மசக்காளிபாளையம் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் கிடக்கிறது. அங்கு மூடி அமைக்கப்படவில்லை. அந்த பள்ளத்தை பஞ்சு அட்டையை வைத்து மறைத்து உள்ளனர். இதை அறியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாக்கடை கால்வாயை முறையாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்