வேகத்தடையால் விபத்து

Update: 2023-05-07 14:39 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை செல்லும் ரோட்டில், மலை அடிவாரத்துக்கு முன்னதாக புதிய வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் வெள்ளை நிற கோடுகள் சாதாரண சுண்ணாம்பு மூலம் அடித்து இருக்கிறார்கள். அது மழையில் கரைந்து போய்விட்டது. தற்போது அந்தவேகத்தடை வெள்ளை நிற அடையாளம் இன்றி காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்று விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே வேகத்தடையில் வெள்ளை கோடுகள் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்