பயன்படாத அடி பம்பு

Update: 2023-05-07 09:39 GMT

கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட காணியாலம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது சாலையோரம் இருந்த அடி பம்பு வரையில் சாலை போடப்பட்டது. ஆனால் அந்த அடி பம்பு அகற்றப்படவில்லை. அது பயன்பாட்டிலும் இல்லை. இதனால் காட்சிப்பொருளாக கிடக்கிறது. மேலும் சில நேரங்களில் வாகன விபத்துக்கும் வழி வகுக்கிறது. எனவே பயனின்றி கிடக்கும் அந்த அடி பம்பை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்