விளம்பர பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-05-07 09:28 GMT

துடியலூரில் ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் ஆங்காங்கே அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்