முறையான மாற்று பாதை தேவை

Update: 2023-05-03 18:28 GMT
திண்டிவனம்-மரக்காணம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மானூர், என்டியூர், அழகியபாக்கம், பிரம்மதேசம் போன்ற பகுதியில் உள்ள பாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. ஆனால் பாலத்தை கடந்து செல்ல மாற்று பாதை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே முறையான மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்