சாலையை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-05-03 15:47 GMT
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஜவகர்பஜார், மார்க்கெட் வழியாக 5 ரோடு செல்லும் சாலையில் கருப்பாயி கோவில் தெரு உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. மேலும் ஜவகர்பஜாரில் இருந்து அமராவதி ஆறு, பசுபதிபாளையம், ஐந்துரோடு, பாலம்பாள்புரம், அரசு காலனி, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த கருப்பாயி கோவில் தெரு வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கருப்பாயி கோவில் தெரு சாலையில் நடுவில் பாதாள சாக்கடை பள்ளம் ஏற்பட்டது. இந்த பாதாள சாக்கடை பள்ளத்தை சரிசெய்யும் வகையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே கருப்பாயி கோவில் தெரு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்