ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-03 09:25 GMT

கோவை துடியலூரில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து, ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு வருபர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து உள்ளதால், பாதசாரிகள் சாலையின் நடுவில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்