ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் இருந்து மடத்துவிளை வழியாக பூவரசூர் வரையிலும் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுவில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.