மணல் லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2023-04-30 17:48 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி வெள்ளாளப்பட்டியில் இருந்து இரும்பாலை செல்லும் சாலையில் தினமும் கிரசர் மண் ஏற்றிக்கொண்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. இதனால் காற்றடிக்கும் போது சாலையில் செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் மீது மணல் பறந்து வந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்