சேதமடைந்த சாலை

Update: 2023-04-30 16:36 GMT

வருசநாடு அருகே பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது. இந்த இணைப்பு சாலை வழியாக தான் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர். சாலை சேதமடைந்து இருப்பதால் உரிய நேரத்திற்கு அவர்களால் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்