சாலை வசதி வேண்டும்

Update: 2023-04-30 10:25 GMT

திருவாரூர் மேம்பாலம் அருகே மாவட்ட மைய நூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்கு செல்ல மாணவ-மாணவிகள், வாசகர்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் நூலகத்துக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நூலகத்துக்கு செல்ல சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

சாலை பழுது