தார் சாலை வேண்டும்

Update: 2023-04-26 13:31 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் வேம்பனூர் கிராமம் தேக்குடப்பு பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிகலைக்கொண்டு மண் சாலை அமைக்கப்பட்டது. தற்போது 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு சாலையை சரி செய்து வருகின்றனர். ஆனால் தார் சாலை இல்லாததால் தற்போது பெய்த கோடை மழைக்கு இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்