சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-19 08:45 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராவிளையில் இருந்து பூவன்குடியிருப்புக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை முன்னாள் அமைச்சர் சிதம்பரநாதன் காலத்தில் அமைக்கபட்டது. மேலும், இந்த சாலையில் 12 தெருவிளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சாலையில் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. தெருவிளக்குகளும் எப்போது எரிந்த நிலையிலேயே உள்ளன. எனவே, செடிகளைஅகற்றி சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுரேஷ், பூவன்குடியிருப்பு.

மேலும் செய்திகள்